(FASTNEWS | COLOMBO) – பாராளுமன்றில் இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தால் சாகும் வரையில் உண்ணவிரதம் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே நேற்று(28) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
“எமக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து எம்மை சிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. முடிந்தால் செய்து காட்டுங்கள்.. விஜயகலாவுக்கு ஒரு சட்டம் எமக்கு இன்னொரு சட்டமா… எம்மை சிறையில் இட்டால் சாகும் வரையில் உண்ணாவிரதம் இருப்போம்.”