சாதாரணத்தர பரீட்சை பெறுபேறுகள் – 28 இல் வெளியிடப்படும்…

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரணத்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் 6 இலட்சத்து 88,573 மாணவர்கள் பரீட்சையில் தோற்றியிருந்தனர். விடைத்தாள்களை திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.