நாளை(12) ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
குறித்த இந்த பரீட்சை நடைபெறும் அனைத்து மத்திய நிலையங்களுக்கும் வினாப்பத்திரங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று(11) ஆரம்பமாகவுள்ளது.
பொலிஸ் மற்றும் திணைக்களத்தின் அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் குறித்த இந்த நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
#reeshmmaa..