சானுக ரத்துவத்த உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுவிப்பு.

நிதிமோசடி குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்ட  சானுக ரத்துவத்த உட்பட ஐவரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(21) பிறப்பித்துள்ளது.

2.4 பில்லியன் அரச பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் குறித்த ஐவரையும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கடந்த 14 ஆம் திகதி கைது செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது