சாம்பியன்ஸ் கிண்ண தொடருக்காக அவசரமாக இலண்டன் நோக்கி புறப்படுகிறார் தனஞ்சய..

சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் கலந்து கொள்வதற்காக இலங்கை அணியின் சகல துறை வீரர் தனஞ்சய டி சில்வா இன்று(09) இலண்டன் நோக்கி புறப்பட உள்ளார்.

இலங்கை அணியின் வீரர் குசல் ஜனித் பெரேராவிற்கு பதிலாக அவர் போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக விளையாட்டுத் திறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

குசல் ஜனித் பெரேராவுக்கு ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே தனஞ்சய டி சில்வா சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் இலங்கை அணி சார்பாக விளையாட உள்ளார்.

 

(rizmira)