சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிலவும் கடும் மழை காரணமாக தெற்கு அதிவேக வீதியின் கொக்மடுவ வெலிபன்ன ஆகிய வெளியேறும் பகுதிகளில் வெள்ள நீர் காணப்படுவதனால் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் வேகத்தை மணிக்கு 60 கிலோ மீற்றர் வரை கட்டுப்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.