சாரதிகள், நடத்துனர்கள் மதுபாவனை தொடர்பில் பரிசோதிக்க நடவடிக்கை…

(FASTNEWS|COLOMBO) மேல் மாகாணத்தின் தனியார் பேரூந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மதுபானத்தை பயன்படுத்துவது தொடர்பில் கண்டறிய இன்று(01) முதல் விரிவான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை, பயணிகளுக்கு பயண சீட்டுகள் வழங்கப்படுகிறதா என்பது தொடர்பிலும் முற்றுகை மேற்கொள்ளப்படுவதாகவும் மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து சபை அதிகார சபையின் தலைவர் துசித்த குலரத்ண தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் தனியார் பயணிகள் பேருந்துகளை இள நீல நிறத்திற்கு மாற்றுவதற்கான சட்டம் இன்று முதல் அமுலுக்கு வருகிறது.

இது தொடர்பிலான நடவடிக்கைகள் இன்று(01) முதல் ஆரம்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.