சாரதி அனுமதிப்பத்திரம் – மேலும் 3 மாத கால அவகாசம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சாரதி அனுமதிப்பத்திர உரிமங்களுக்கு மேலும் 3 மாத கால அவகாசம் வழங்குவதற்கு போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஜூலை முதலாம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திர உரிமங்களுக்கு மேலும் 3 மாத கால அவகாசம் வழங்குவதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டும் நாளாந்தம் அதிகளவான மக்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு வருகைத் தருவதன் காரணமாகவும் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.