சாலாவ இராணுவ முகாமையும் விட்டுவைக்காது துடைத்தெடுத்த பசில்..

சுமார் 800 வீடுகளையும் நிறுவனங்களையும் நாசப்படுத்திய சாலாவ இராணுவ முகாம் ஆயுதக் கிடங்கிலும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வியாபாரத்தில் ஈடுபட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

2010ம் ஆண்டு இந்த வியாபார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்காக பசில் ராஜபக்ஷவுடன் வியாபார உறவைக்கொண்டிருந்த ஒருவரின் முகவரது தகவல்களை ஆங்கில ஊடகம் செம்மைப்படுத்தி வெளியிட்டுள்ளது.

இதில் பசில் ராஜபக்ஷ மற்றும் அவரின் மனைவி புஸ்பா ராஜபக்ஷவின் பெயர்களை தவிர ஏனைய பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சாலாவ முகாமில் இருந்த பயன்படுத்தப்பட்ட ஆட்டிலறி பீப்பாய்களை இரும்பு விற்பனை அடிப்படையில் பசில் ராஜபக்ஷ விற்பனை செய்ய முன்வந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.