2018ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்கும் போது பிரதேச செயலகத்தினால் 06 மாத காலத்திற்கு குறைவான காலத்தில் பெற்றுக்கொண்ட, பிறப்புச் சான்றிதழின் முதல் பிரதியினை முன்வைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கான கால எல்லையினை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் ஜெனரல் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.
அதன்படி பிரதேச செயலகத்தினால் பெறப்படும் பிறப்புச் சான்றிதழின் முதல் பிரதியினை முன்வைக்குகையில் தாமதம் நிலவுவதாக ஆணையாளர் மேலும் தெரிவித்திருந்தார்.
#rishma