சிகரெட்டுக்கு அறவிடப்படும் வரியை 90% அதிகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அமெரிக்காவில் வைத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொருளாதார மற்றும் சமூக கவுன்ஸில் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தொற்றாத நோய்களைக் கட்டுப்படுத்துவற்காக புகையிலைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை மேலும் அதிகரிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.