2018ஆம் ஆண்டின் முதலாவது இன்வெஸ்ட் ஸ்ரீலங்கா மாநாடு இன்று(02) சிங்கப்பூரில் ஆரம்பமாகின்றது.
சிங்கப்பூர் போ-சீசன்ஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதான சொற்பொழிவை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையம் ஏற்பாடு செய்கின்றது. இதில் பிராந்தியத்தின் முன்னணி முதலீட்டாளர்கள் கலந்து கொள்வுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சிங்கப்பூர் புறப்பட்டுசென்றமை குறிப்பிடத்தக்கது.