செலிங்கோ குழுமத்தின் தலைவர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலியா கொத்தலாவலவை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, இன்று (06) உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபரின் உடல் நிலை தொடர்பில் வைத்திய அறிக்கை கிடைக்கத் தாமதமாவதால், இது தொடர்பில் அறிக்கை வழங்குமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு நீதவான் உத்தரவிட்டார்.
இன்னும், சந்தேகநபரிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்கு தமக்கு மேலும் கால அவகாசம் வழங்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரும் நீதிமன்றத்தில் கோரியுள்ளனர். சேமிப்பாளர்களின் 4.3 பில்லியன் ரூபாயை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.