சிரியா அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான சண்டை நிறுத்த ஒப்பந்தத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்தும், சிரியா அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்து கிளர்ச்சிக் குழுக்கள் விலகியதால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்தும் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், ரஷ்ய அதிபர் புதினும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இப்பேச்சின் போது சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சியை மேலும் தீவிரப்படுத்த இரு தலைவர்களும் முடிவெடுத்துள்ளனர்.