(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாம் தற்போது விளையாடும் விதம் அனைத்து எதிர்அணிகளுக்கு அழுத்ததை ஏற்படுத்துகிறது. எதிர் அணிகள் நூற்றுக்கு 100 வீதம் திறமையாக விளையாட விட்டால் அவர்கள் தோற்றுவிடுவார்கள் என்ற நிலை தோற்றம் பெற்றுள்ளது என குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம் முதலாவது இருபதுக்கு 20 போட்டி நிறைவுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர், எமது அணியில் உள்ள வீரர்கள் ஓட்டங்களை பெற்றுக்கொள்ளவிட்டால் அவர்களுடைய வாய்பை இழக்க நேரிடும் என்ற நிலை தோற்றம் பெற்றுள்ளது. இது சிறந்த நிலமையாகும் காரணம் அணிக்கு வெ ளியில் உள்ள வீரர்கள் ஓட்டங்களை பெற்று வெளியில் உள்ளனர்.கடந்த காலங்களை பொறுத்தவரையில் இந்த நிலை இலங்கை அணியில் காணப்படவில்லை என தெரிவித்தார்.
மேலும் அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக நான் விளையாடுவது சிறந்தது என நினைப்பதாக குசல் மெண்டிஸ் தெரிவித்தார்.