சிறுநீரக மோசடி தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய நாட்டவர் 8 பேர் சம்பந்தமான வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான லக்ஷ்மன் குமார என்பவர் மிரிஹான காவற்துறை தடுப்பில் இருந்த போது தப்பி சென்றுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.
பின்னர் குறித்த நபரை கைது செய்வதற்காக நீதிபதி திறந்த பிடியாணையை பிறப்பித்துள்ளார்.