தேசிய சிறுவர் தினத்தையொட்டி பாடசாலை மாணவர்களின் சிறுவர் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் முகமாக இலங்கை வங்கியின் அட்டாளைச்சேனை கிளையினால் பாடசாலை மாணவர்களுக்கு உண்டியல் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று காலை (01) இடம்பெற்றது.
வங்கி முகாமையாளர் ஏ.சி.கியாசுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு இலங்கை வங்கியின் அம்பாறை மாவட்ட பிராந்திய முகாமையாளர் டபில்யூ.எம்.யூ.அத்தனபொல மற்றும் அல் ஜென்னா பாடசாலை அதிபர் எம்.ஏ.அப்துல் ஹை ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.