சிறைச்சாலை ஆணையாளராக துஷார உபுல்தெனிய நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஆணையாளராக துஷார உபுல்தெனிய நியமிக்கப்பட்டுள்ளார்.

துஷார உபுல்தெனிய, முன்னர் சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.