கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக தேடப்பட்டுவந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர்கள் நேற்று(20) சிலாபம் பகுதியில் உள்ள பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது சந்தேகத்திற்குரியவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த ஒக்டோபர் மாதம் மூன்றாம் திகதி கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.