சில உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு…

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து சில உணவுகளின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

எனவே, ஒருகோப்பை தேனீரின் விலை 20 ரூபாவாகவும், பால் தேனீரின் விலை 40 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும் அப்பம் ஒன்றின் விலை 15 ரூபாவாகவும், சோற்றுப் பொதி ஒன்றின் விலை 130 ரூபாவாகவும் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.