சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(FASTNEWS|COLOMBO) 5 மாவட்டங்களுக்கு நிலவும் மழையுடனான வானிலையால்  மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

மேற்படி மழை காரணமாக மண்மேடு சரிந்து வீழ்வதுடன் கற்பாறைகளும் சரிந்துவீழும் அபாயமுள்ளதால் குறித்த பகுதிகளிலுள்ள மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் சிரேஷ்ட ஆய்வாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.