சில பகுதிகளுக்கு 24 மணி நேர நீர் வெட்டு…

(FASTNEWS|COLOMBO) கடவத்த முதல் கிரிந்திவிட வரையான பகுதிகளுக்கு இன்று(29) மாலை 6 மணியில் இருந்து நாளை(30) மாலை 6 மணி வரை 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை தெரிவித்துள்ளது.

கணேமுல்ல வீதி மற்றும் அதனுடன் தொடர்புபட்ட அனைத்து வீதிகள் அடங்கிய பகுதிகளுக்கும் குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.