சுமார் 3 மணித்தியாலம் மஹிந்தவிடம் வாக்குமூலம் பெற்றுச் சென்ற குற்றப்புலனாய்வு அதிகாரிகள்… (UPDATE)

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்ற புலனாய்வு பிரிவினர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் சுமார் 3 மணித்தியாலம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

———————————————————–(UPDATE)

சி. ஐ. டி அதிகாரிகள் தற்போது மஹிந்தவின் இல்லத்தில்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தற்போது அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு சென்றுள்ளனர்.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுவதற்காகவே குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அங்கு சென்றுள்ளனர்