சீகிரியாவில் வடக்கு நீர் அகழி பகுதியில் மேற்கொண்ட அகழ்வின் போது சிங்க உருவம் ஒன்று கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், சீகிரிய தொடர்பான பல முக்கிய வரலாற்றுத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அண்மையில் மேற்கொண்ட அகழ்வில் சிங்க உருவத்திற்கு மேலாக முத்துக்கள், இரும்பு தொல்பொருட்கள் மற்றும் சில மட்பாண்டங்களும் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பிரசாந்த குணவர்தன தெரிவித்துள்ளார்.
அகழ்வின் போது மீட்கப்பட்ட மட்பாண்டங்கள், வெளிநாட்டு தோற்றங்களை கொண்டுள்ளமையால் சீகிரியாவில் காசியப்பர் ஆட்சியின் போது சர்வதேச தொடர்புகள் காணப்பட்டிருக்கலாம் என்பது பேராசிரியரின் கருத்தாகும்.
குறித்த இந்த ஆட்சியின் போது ரோம் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடன் வர்த்தக தொடர்புகள் காணப்பட்டுள்ளமையும் இதன் ஊடாக புலப்படுகின்றது.
####