இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் சீக்குகே பிரசன்ன, எதிர்வரும் மார்ச் மாதம் 08ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஹொங்கொங் T20 போட்டியில் “க்ளக்சி க்லேடியேட்டேர்ஸ்” அணிக்கு ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, மேற்குறித்த போட்டியில் இலங்கை சார்பில் கைகோர்க்கும் மூன்றாவது இலங்கை வீரர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இப்போட்டிக்கு குமார் சங்கக்கார மற்றும் திலகரத்ன டில்ஷான் ஆகியோரும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
குமார் சங்கக்கார, சீக்குகே பிரசன்ன பிரதிநிதித்துவப்படுத்தும் “க்ளக்சி க்லேடியேட்டேர்ஸ்” அணி சார்பில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளதோடு, திலகரத்ன டில்ஷான் “சிடி கை டெக்” அணிக்கு ஒப்பந்தமாகியுள்ளார்.