சீனாவில் ஏழு மாணவர்கள் கத்தியால் குத்தி கொலை..

சீனாவில் பள்ளியில் இருந்து வீடு திரும்பியவர்கள் மீது மர்ம நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில், 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்து வந்த பொலிசார் காயமடைந்த மாணவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்து வருகின்றனர்.

தாக்குதல் நடத்திய நபர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.