(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீனாவின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக அப்பகுதி மக்கள் பீதிக்கு உள்ளாகியுள்ளனர்.
குறித்த நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவு கோலில் பாதிவாகியுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக கடைகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் உருண்டு விழுந்ததைக் கண்ட பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீதியில் தஞ்சமடைந்துள்ளனர்.
மேலும் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் ஜியாஷி பகுதியில் உள்ள மக்களை வெளியேறுமாறு சீன அரசு கேட்டுக் கொண்டுள்ளது.