நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 38,040 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் 8 பேர் சீரற்ற காலநிலையால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடும் மழையுடன் வீசிய காற்றின் காரணமாக, 19 வீடுகள் முழுமையாகவும், 918 வீடுகள் பகுதி அளவிலும் சேதடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.