சீரற்ற காலநிலையுடன் களத்தில் இறங்கி போராடும் அமைச்சர்கள் இவர்களா தானாம்…..

இயற்கை அனர்த்தத்தை காரணமாகக் கொண்டு அமைச்சர்கள் சிலர் மழை வெள்ளத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர்.

பலர் உண்மையாக உதவி செய்யும் நோக்கோடு களத்தில் இறங்கியுள்ள அதேவேளை ஒருசிலர் ஊடகங்களில் தாமும் உதவி செய்கிறோம் என்பதை காட்டுவதற்காக இவ்வாறு நடந்து கொள்வதாகவும் மக்கள் புலம்புகின்றனர்.

இதேவேளை நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க கடுவெல பிரதேசத்தில் நிரம்பியுள்ள வெள்ளநீரில் இறங்கி மக்களை பார்வையிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவருடன் இணைந்து முன்னாள் மாகாண சபை உறுப்பினரான ரேணுக துசாந்தவும் சென்றுள்ளதாக இணையங்களில் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினரான பிரசன்ன ரணதுங்க பெகோ இயந்திரத்தில் ஏறி பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட புகைப்படங்களும் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

renuka