நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இதுவரையில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன்,11 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 5 ஆயிரத்து 675 குடும்பங்களை சேர்ந்த, 21 ஆயித்து 617 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆயிரத்து 427 வீடுகள் பகுதியளவிலும், 16 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.