UPDATE – சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பினை அண்மித்த பகுதிகளில் மின்தடை

சீரற்ற காலநிலை காரணமாக கொலன்னாவ, சேதவத்த, கோகிலவத்த, சின்ஹபுற, ஒருகொடவத்த, கொடிகாவத்த மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் பாதுகாப்பிற்காக மின்தடை அமுலில் உள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த பிரதேசங்களிலிருந்து மக்களை அப்புறப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் குறித்த நடவடிக்கைகளில் ஏற்பட்ட காலதாமதத்தினால் மக்கள் பதற்ற நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.