மத்திய வங்கியின் பிரதி ஆளுநராக சீ.ஜே.பீ. சிறிவர்தனவை நியமிப்பதற்காக, கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அமைச்சரவைப் பத்திரத்தை இன்று(30) கூடிய புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முதலாவது கூட்டம், இன்று(30) காலை நடைபெற்ற போதே மேற்கண்டவாறு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.