வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றினை ”சிங்களே ஜாதிக பெரமுண” (சிங்கள தேசிய முன்னணி) முன்வைத்துள்ளது.
காலை 10 மணியளவில் பொலிஸ் தலைமையகத்தில் இந்த முறைப்பாட்டை வழங்கியதாக அதன் தலைவர் அஹுலுகல்லே சிறி ஜீனாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.
விக்னேஸ்வரனுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவதை விட அவர் போன்று மற்றையவர்களும் செயற்படாதிருக்கும் வகையில் இலங்கை சட்டத்தின்படி அவருக்கு எதிராக நடவடிக்கையெடுத்து தண்டனை வழங்குமாறு கோரியே இந்த முறைப்பாட்டை மேற்கொள்ளவுள்ளதாக குறித்த தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.