அரசாங்க மருத்துவ நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் அடுத்த தலைவராக சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்னவின் மனைவியும், பிரத்தியோக செயலாளருமான விசேட வைத்திய நிபுணர் சுஜாதா சேனாரட்ன போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 6ஆம் திகதி இரவு இடம்பெற்ற சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டத்தின் போதே சுஜாதா சேனாரட்ன குறித்த பதிவுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.