சுகாதார அமைச்சுக்குள் பலாத்காரமாக நுழைந்த பல்கலைக்கழக மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

அண்மையில் பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட  சைட்டம் எதிர்ப்பு போரட்டத்தின் போது  சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரசேகர உள்ளிட்ட 5 பேரின் விளக்கமறியலை எதிர்வரும் 4ஆம் திகதிவரை நீடிப்பதாக இன்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.