இன்று (27) சுகாதார அமைச்சுக்கு முன்பாகதமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்னர்
நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் சுகாதார ஊழியர்கள் ஆரம்பித்த பணி பகிஷ்க
-ரிப்பு இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
30 பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 40,000 ஊழியர்கள் இந்த பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்
-கை சுவசேவா சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்த பணி பகிஷ்கரிப்பினால் வைத்தியசாலைகளின் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒருசில பிரதான வைத்தியசாலைகளின் நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக இராணுவத்தின
-ரின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளது.
சுகாதார ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பினால் நோயாளர்கள் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக எமது பிராந்
-திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் வழங்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த
பணி பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கூறியுள்ளார்.