சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் சுகாதார கல்விப் பணியகம் இன்று(27) முதல் இரத்துச் செய்யப்படவுள்ளது.
அமைச்சரவையின் அனுமதியுடன் சுகாதார மேம்பாட்டு பணியகம் என்ற பெயரில் புதிய நிறுவனம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக, குறித்த அந்த அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிலுள்ள சுகாதார துறைகளை மேம்படுத்தும் புதிய நிறுவனமொன்றை நிறுவுவதே இதன் நோக்கமாகும்.
1972ம் ஆண்டு சுகாதார கல்வி பணியகம் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
(rizmira)