சம்பள பிரச்சினை சம்பந்தமாக அரசாங்கம் சரியான தீர்வு வழங்காமையின் காரணமாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்வரும் 04 மற்றும் 05ம் திகதிகளில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக சுங்க அதிகாரிகள் தொழிற்சங்கம் கூறியுள்ளது.
குறித்த அந்த தினங்களில் சுங்க அதிகாரிகள் அனைவரும் சுகயீன விடுமுறை செய்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.