ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று(19) மாலை 07.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது.
மறு சீரமைப்பு முன்னேற்றம் மற்றும் கட்சியின் மாநாடு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
அவ்வாறே, அமைச்சுப் பதவிகளில் இருந்து நீங்கிய சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழுவும் குறித்த கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் வருகை தர மாட்டார்கள் என இதுவரையிலும் அறிவிக்கப்படவில்லை எனவும் குறித்த கட்சியின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.