சுதந்திர தினத்தை தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்கும் நிலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என அரசு கூறுமாயின் வடக்கு கிழக்கு மக்கள் அன்றைய நாளினை தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க நிர்ப்பந்திக்கப்படுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாட முடியாது என்ற அறிவிப்பைத் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தெரிவித்துள்ளது.

இலங்கையில் சிங்கள மொழி எவ்வாறு அரசகரும மொழியாகக் காணப்படுகின்றதோ, அதேபோன்று தமிழ் மொழியும் அரசகரும மொழியாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.