சுதந்திர தினமன்று ஓய்வடைகிறார் எம்.ஆர். லத்தீப்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விசேட அதிரடிப்படையின் (STF) தலைமை அதிகாரி, சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரி (DIG) எம்.ஆர். லத்தீப் அவர்கள் இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் 4ம் திகதி ஓய்வு பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் குற்றத்தடுப்பு விவகாரங்களில் அதி திறமையாக செயற்பட்டு நாட்டு மக்களினதும், அரசினதும் நன்மதிப்பை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.