சுனில், லசந்த மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கு மீளவும் தலைமைப் பதவிகள்…

பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்ற தெரிவுக் குழுவின், (கோப் குழுவின்) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியை மீண்டும் நியமிக்க சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நேற்று(17) ஒன்றுகூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரச கணக்காளர் சபையின் தலைவராக பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும் நிதிக் குழுவின் தலைவராக எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை மீளவும் நியமிக்க குறித்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் தெரிவிக்கபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.