சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளமை தொடர்பில் உரிய பதிலை வழங்குமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளமை தொடர்பில் உரிய பதிலை வழங்குமாறு கோரி சுன்னாகம் பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்க்கப்பட்டது.

சமூக நீதிக்கான வெகுஜன சுற்றுச்சூழல் அமைப்பினால் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சுன்னாம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள கிணற்று நீரினை பாவிக்கலாமா இல்லையா என்பது தொடர்பில் உரிய பதிலை வழங்குமாறு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.