(FASTGOSSIP| COLOMBO) – ஆளும் தரப்பையும், எதிர் தரப்பையும் அதிர வைத்த ஜேவிபியின் “தேசிய மக்கள் சக்தி” நேற்று(17) காலி முகத்திடலில் இடம்பெற்றது.
இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க அறிவிக்கப்பட்டிருந்தார்.
குறித்த கூட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளில் ஒருவராக கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த முனீர் முளப்பர் தெரிவிக்கையில்;
“… இந்த மேடையில் ஒரு மாற்றம் தெரிவதை உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.. அன்று சுதந்திரம் கிடைத்த போது மக்கள் எவரையும் பிரித்துப் பார்த்து வேறுபாடாக இருக்கவில்லை. எங்களிடையே பிரச்சினைகள் இருக்கவில்லை. மொழி என்ற பிரச்சினையும் இல்லை. மதபேதம் என்ற பிரச்சினை இருக்கவில்லை. சுதந்திரம் பெற்ற பின்னர் இருந்து நாட்டின் தலைமைகளுக்கு முடியவில்லை நாட்டினை ஆளுவதற்கு… பிரச்சினை இல்லாத நாட்டினை கட்டியெழுப்ப முடியாது போனது…
அவர்கள் என்ன செய்தார்கள்… நாட்டு மக்களிடையே இனவாதத்தினை தூண்டினார்கள். ஆனால் இன்றைய மக்கள் திரளினை பார்க்கும் போது இனவாத, மதவாத அனைத்தினையும் தாண்டிய ஒரு இலங்கை சமூகம் திரண்டுள்ளதனை காணலாம்.
எமக்கு மதவாதமும் வேண்டாம், இனவாதமும் வேண்டாம்.. இன்று அரசியலுக்கு வருவது உழைக்கவே அது எந்தவழியில் என்றாலும் பரவாயில்லை.. சில அரசியல்வாதிகள் தொடர்பில் வெட்கம்.. அவர்கள் தமது வயதினையும் விட கூடிய அதிக காலம் அரசியலில் இருந்து விட்டார்கள்… இன்னமும் தாம் அரசியலில் ஈடுபட்டு நாட்டினை அபிவிருத்தி செய்ய வேண்டுமாம்..”