சுமார் 5 இலட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் உள்ள 5 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தேசிய அடையாள அட்டை இல்லை என, இலங்கை மனித உரிமைகளுக்கான நிலைய பதில் நிறைவேற்று பணிப்பாளர் சுரங்கனி ஆரியவங்ச, தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமைகளுக்கான நிலையம் முன்னெடுத்த ஆய்வின் போது குறித்த தகவல் தெரியவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களின் 87 சதவீதமானவர்கள் பெருந்தோட்டங்கள் மற்றும் கிராமங்களை சேர்ந்தவர்கள் எனவும் குறித்த ஆய்வு குறிப்பிடுகின்றது.