சுமார் 8 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக 8 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் வியாழக் கிழமை இரவு 10 மணி முதல் மறுநாள் வெள்ளியன்று காலை 06 மணி வரைக்கும் பத்தரமுல்லை, கொஸ்வத்தை, தலஹேன, மாலபே, ஜயவதனகம மற்றும் தலவத்துகொட ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.