சுமார் 9கோடி பெறுமதிமிக்க காங்கேசன்துறை கடலில் இருந்து ஹெரோயின் மீட்பு..

காங்கேசன்துறை கடற்படை தலைமைப்பீடத்தில் இருந்து 10 கடல் மைல் தொலைவில் கடலில் வீசப்பட்டிருந்த நிலையில் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான முறையில் மிதந்து வந்த பொதி ஒன்றினை கைப்பற்றியிருந்தனர்.

அதனை பிரித்து சோதனையிட்ட போது ஹெரோயின் போதைப்பொருள் இருந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

கடற்படைதளத்திற்கு கொண்டு வந்து மேலதிக பரிசோதணைகள் மேற்கொள்ளப்பட்ட போது இது 100% ஹெரோயின் என கண்டறியப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி இலங்கை மதிப்பீட்டில் 9கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட ஹெரோயின் வடக்கு கடற்பரப்பு ஊடாக கொழும்பிற்கு எடுத்து செல்வதற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

 

(rizmira)