சட்டவிரோதமான முறையில் 95 இலட்சத்து 71,320 ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை இலங்கைக்கு கடத்தி வந்த பெண்கள் நால்வரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, சுங்க பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான 04 பேரும் கொழும்பை அண்மித்த பிலியந்தலை, பத்தரமுல்லை, முல்லேரியா மற்றும் பம்பலப்பிட்டி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
சிங்கப்பூரில் இருந்து இந்தியா சென்று இந்தியாவின் மும்பை நகரில் இருந்து இலங்கைக்கு வந்த பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.