(FASTNEWS|COLOMBO) – ஜூன் 05ஆம் திகதி இடம்பெறும் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுற்றாடல் வாரமொன்றை பிரகடனப்படுத்தி சுற்றாடல் பாதுகாப்பிற்காக தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அனைத்து செயற்திட்டங்களையும் பலப்படுத்தி அவற்றை வினைத்திறனான முறையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கேட்போர்கூடத்தில் நேற்று(24) இடம்பெற்ற மத்திய சுற்றாடல் அதிகார சபையின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
சுற்றாடல் அதிகார சபையினால் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.