சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு…

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் செப்டெம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருப்பதாக சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் 9 மாத காலப்பகுதியில் பத்து இலட்சத்து 73 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இத் தொகை 11 தசம் 6 சதவீத அதிகரிப்பாகும் என தெரிவிக்கப்படுகிறது.